A+ A-

ஜெயலலிதாவின் ஐந்தாண்டு ஆட்சியில் தமிழகத்தில் ஊழல் பெருகி விட்டது

 
PM Narendra Modi
தமிழகத்தில் ஊழல் பெருகிவிட்டது. அதனால் ஆட்சியை மாற்ற வேண்டும் என்று மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜ வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பல்வேறு கூட்டங்களில் பேச திட்டமிட்டுள்ளார். அதன் ஒரு கட்டமாக பிரதமர் மோடி நேற்று கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசினார். அதன்பின், சென்னை நந்தனம் ஓய்எம்சிஏ மைதானத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசினார்.

அப்போது அவர் பேசியதில் சில பகுதிகள்: உங்களுக்கு எந்த நன்மையும், இங்குள்ள அரசால் கிடைக்கவில்லை. சென்னை வெள்ளத்தால் பாதித்த ேபாது, மத்திய அரசால் மீட்பு பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டன. நான் உங்களுக்காக சென்னைக்கு ஓடோடி வந்தேன். தமிழ்நாட்டை யார் காப்பாற்ற போகிறார்கள் என்பதற்காக தான், இந்த தேர்தல் நடக்கிறது. தமிழகத்தில் லஞ்சம், லாவண்யம் தலை விரித்தாடுகிறது. இந்த தேர்தலில் தமிழகத்தின் எதிர்காலம் என்னவாகப் போகிறது என்பது தான் பிரச்னையாக அமைந்துள்ளது. இதனால் ஊழல் நிறைந்த இந்த ஆட்சியை மாற்ற வேண்டும்.

தமிழக மக்கள் மிகவும் சிந்தித்து, தமிழகத்தின் எதிர்காலத்தை மாற்ற திட சிந்தனையோடு இருக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. தமிழகத்தில் இளைஞர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக இளைஞர்களின் எதிர்காலம் பற்றி சிந்திக்க வேண்டிய தருணம் இது. பொதுவாக தேர்தல் என்று சொன்னால் யார் எம்எல்ஏவாக ஜெயிப்பார்கள். யார் ஆட்சியில் அமரப்போகிறார்கள் என்று தான் கணக்கிடுவார்கள்.அது பிரச்னை அல்ல. இந்த தேர்தலில் தமிழகத்தின் எதிர்காலம் என்னவாகப் போகிறது என்பது தான் பிரச்னையாக அமைந்துள்ளது. நீங்கள் இங்கு குடும்பங்களை பார்த்திருப்பீர்கள். ஆட்சியை பார்த்திருப்பீர்கள். நாம் பார்க்க வேண்டியது தமிழகத்தின் எதிர்காலம் குறித்து முடிவெடுப்பதை பற்றி தான் பார்க்க வேண்டும். நீங்கள் இப்போது டெல்லியில் உள்ள மத்திய அரசை பார்த்திருப்பீர்கள். மாநிலங்களில் ஏற்படும் பிரச்னைகளின் போது அந்த மாநில அரசுகளை விட வேகமாக செயல்படுவது மத்திய அரசு தான்.

நீங்கள் சமீபத்தில் தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை பார்த்திருப்பீர்கள். எந்த அளவுக்கு மக்கள் துன்பத்துக்கு ஆளாகினர். அந்த வெள்ளத்தின் போது உடனடியாக வந்து உதவி செய்தேன். இலங்கையில் இருக்கும் தமிழ் சகோதரர்கள் நிலையை எண்ணிப் பார்த்தால் கவலைக்கிடமாக இருந்தது. அவர்களின் துன்பத்தை போக்க இலங்கையுடன் நல்லுறவை ஏற்படுத்தி யாழ்ப்பாணம் போன முதல் பிரதமர் நான் தான். எடைபோட்டு பாருங்கள். மக்களுக்காக சட்டத்தின் படி உயிரோட்டமான மத்திய அரசு செயல்படுகிறது என்பதை எடுத்து சொல்லத் தான் இந்த விஷயங்களை சொன்னேன். இப்போது நீங்கள் முடிவு செய்ய வேண்டும். உங்களை வாழ வைக்கக் கூடிய அரசு வேண்டுமா? அல்லது வீழ்ச்சியடைக்கூடிய அரசு வேண்டுமா? அல்லது உங்களை கஷ்டத்தில் தள்ளக்கூடிய ஆட்சி வேண்டுமா? சிந்தித்து செயல்படுங்கள்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.ஏற்கனவே மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், பியூஸ் கோயல், தேசிய செயலாளர் முரளீதர்ராவ் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் அதிமுக அரசு மீது ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகளையும், முறைகேடுகள் குறித்த புகார்களையும் கூறியிருந்தனர். இப்போது பிரதமர் மோடியும், தமிழகத்தில் ஊழல் பெருகிவிட்டது என்று குற்றம்சாட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வலைப்பக்கம் : http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=215105
வலைத்தளம் : தினகரன்

தமிழகத்தில் ஊழல் பெருகிவிட்டது. அதனால் ஆட்சியை மாற்ற வேண்டும் என்று மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜ வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பல்வேறு கூட்டங்களில் பேச திட்டமிட்டுள்ளார்.