AB de Villiers
ஐ.பி.எல். போட்டியில் குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூர் 144 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் டிவில்லியர்ஸ்- விராட் கோலியின் ஆட்டம் அதிரடியாக இருந்தது. இதனால் பெங்களூர் அணி 20 ஒவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 248 ரன் குவித்தது. டிவில்லியர்ஸ் 52 பந்தில் 129 ரன்னும் (10 பவுண்டரி, 1 2 சிக்சர்) விராட்கோலி 55 பந்தில் 109 ரன்னும் (5 பவுண்டரி, 8 சிக்சர்) எடுத்தனர்.

இருவரும் இணைந்து 98 பந்தில் 229 ரன் குவித்து 20 ஓவர் வரலாற்றில் புதிய சாதனை படைத்தனர்.

பின்னர் ஆடிய குஜராத் லயன்ஸ் 18.4 ஓவர்களில் 104 ரன்னில் சுருண்டது. இதனால் பெங்களூர் அணி 144 ரன்னில் வென்று ஐ.பி.எல்.லில் புதிய சாதனை படைத்தது.

இந்த ஆட்டத்தில் டிவில்லியர்ஸ் 43 பந்தில் சதம் அடித்தார். இதில் 9 பவுண்டரியும், 8 சிக்சரும் அடங்கும். இதன்மூலம் ஐ.பி.எல். போட்டியில் அதிவேகத்தில் சதம் அடித்த 5-வது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

கிறிஸ்கெய்ல் 30 பந்தில் சதம் அடித்தே ஐ.பி.எல். போட்டியில் சாதனையாக இருக்கிறது.



வலைத்தளம் : மாலை மலர்
வலைப்பக்கம் : http://www.maalaimalar.com

 
WEATHER FORECAST
சென்னை: வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தாழ்வு மண்டலமாக மாறி கரையை கடக்கும் என வானிலை மையம் கூறியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் பாம்பன் - நாகப்பட்டினம் இடையே 17-ம் தேதி கரையை கடக்கும் என்றார். 60 கி.மீ வேகத்தில் காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரித்தார்.

மேலும் பேசிய அவர் தென் தமிழகத்தில் பல இடங்களில் பலத்த மழையும், வடதமிழகத்தின் சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவித்தார். சென்னையில் மேகமூட்டம் காணப்படுவதுடன், ஓரிரு இடங்களில் மழை பெய்யக் கூடும் என்றார்.

1
 
rajesh lakhani
சட்டப்பேரவை தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாகவும், பணப் பட்டுவாடா தொடர்பாக இதுவரை 102 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். 

திருப்பூரில் கண்டெய்னர்களில் கைப்பற்றப்பட்ட பணம், விசாரணைகள் அனைத்தும் முடிவடைந்த பின்னர் உரியவர்களிடம் அளிக்கப்படும் என்றும் ராஜேஷ் லக்கானி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தேர்தல் முடிந்த பிறகும், புகார்கள் வந்தால் மறுதேர்தல் நடத்தவும் தயங்க மாட்டோம் என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி எச்சரித்துள்ளார்.



வலைத்தளம் : நியூஸ்7 தமிழ்
வலைப்பக்கம் : http://ns7.tv/ta


Nasim Zaidi
அரவக்குறிச்சி தொகுதியில் மே 16 ஆம் தேதிக்குப் பதில் மே 23 ஆம் தேதி தேர்தல் நடைபெறும். வாக்கு எண்ணிக்கை மே 25 ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கான பிரச்சாரம் சனிக்கிழமை மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. 234 தொகுதிகளுக்கு உட்பட்ட 66,007 வாக்குச்சாவடிகளிலும் நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது.

இந்நிலையில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதிக்கு மட்டும் மே 23-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ''தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் மே மாதம் 16 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என ஏப்ரல் 22 ஆம் தேதி அறிவிக்கை வெளியிடப்பட்டது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதியில் அதிக அளவில் பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் விநியோகிக்கப்பட்டு வருவதாக புகார்கள் வந்தன.

இந்த புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வகையில் தேர்தல் ஆணையம் சார்பில் 3 நிலையான கண்காணிப்புக் குழுக்கள், 6 பறக்கும் படையினர், இரு வீடியோ கண்காணிப்பு குழுவினரும் நியமனம் செய்யப்பட்டனர்.

இதுதவிர மத்திய வருவாய்த் துறை அதிகாரி தேர்தல் செலவின பார்வையாளராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் ஏப்ரல் 22 ஆம் தேதி மத்திய வருவாய்த் துறையினர் அரவக்குறிச்சியில் அன்புநாதன் என்பவரது வீட்டில் சோதனை நடத்தி ரூ. 4.77 கோடியை கைப்பற்றினர்.

அவரது வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மூலம், தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள அனைத்திந்திய அதிமுகவைச் சார்ந்த அமைச்சர்களுக்கு தொடர்பு இருந்தது தெரியவந்தது.

மேலும், அன்புநாதன் வீட்டிலிருந்து 200 சேலைகள் மற்றும் வேஷ்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதவிர பணம் எண்ணும் இயந்திரங்களும், பதிவு செய்யப்படாத ஒரு ஆம்புலன்ஸ் வாகனமும் கைப்பற்றப்பட்டன. வேஷ்டி, சேலைகள் ரூ. 1.30 கோடிக்கு வாங்கப்பட்டதற்கான ரசீதும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதிலிருந்து அதிக அளவில் பணம் இங்கிருந்து வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டது தெரியவந்தது.

இந்த சோதனை குறித்து மத்திய புலனாய்வுத் துறை விசாரணை நடத்த வேண்டும் என பல எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துவந்தன.
இதைத் தொடர்ந்து மே மாதம் 10 ஆம் தேதி மத்திய வருமான வரித் துறையினர் நடத்திய சோதனையில், திமுக வேட்பாளர் கே.சி.பழனிசாமியின் வீட்டிலிருந்து ரூ. 95 லட்சமும், சென்னையில் உள்ள அவரது மகன் கே.சி.பி.சிவராமன் வீட்டிலிருந்து ரூ. 1.03 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுதவிர தேர்தல் ஆணையத்துக்கு பணம் விநியோகம் தொடர்பாக வந்த புகாரைத் தொடர்ந்து ரூ. 68 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், 429 லிட்டர் மது வகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

பணம் விநியோகம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் மொத்தம் 33 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வுகளையும் ஆய்வு செய்ததில் அரவக்குறிச்சி தொகுதியில் வாக்காளர்களுக்கு அதிக அளவில் பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டது தெரியவந்தது.

அரவக்குறிச்சி தொகுதியில் நியாமான தேர்தல் நடத்துவதற்கான சூழ்நிலை இல்லை என தெரிய வருவதால், அங்கு தேர்தல் தள்ளிவைக்கப்படுகிறது. மே 16 ஆம் தேதிக்குப் பதில் மே மாதம் 23 ஆம் தேதி தேர்தல் நடைபெறும். வாக்கு எண்ணிக்கை மே 25 ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கும்'' என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அரவக்குறிச்சி தொகுதியில் திமுக சார்பில் தற்போதைய எம்.எல்.ஏ. கே.சி.பழனிச்சாமியும், அதிமுக சார்பில் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜியும் போட்டியிடுகின்றனர்.

மதிமுக சார்பில் கோ.கலையரசன், பாமக சார்பில் ம.பாஸ்கரன், நாம் தமிழர் கட்சி சார்பில் கு.அரவிந்த், ஐஜேகே சார்பில் சி.எஸ்.பிரபு ஆகியோர் போட்டியிடுகின்றனர்.


வலைத்தளம் : தி இந்து
வலைப்பக்கம் : http://tamil.thehindu.com


THUNDER & RAIN
இலங்கைக்கு அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருப்பதால் தேர்தல் நாளான 16-ம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும் என்றும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாளில் இருந்து பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் சற்று குறைந்து காணப்படுகிறது. பல இடங்களில் இயல்பையொட்டியே வெப்பம் நிலவுகிறது. இந்த நிலையில் தென்மேற்கு வங்கக் கடலில் இலங்கைக்கு அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருப்பதால் சில நாட்கள் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறுகையில், ''தென் மேற்கு வங்கக் கடலில் இலங்கைக்கு அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும். பின்னர், 16-ம் தேதிக்குள் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.

இதன்காரணமாக 15, 16-ம் தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும். 15-ம் தேதி தென் தமிழகத்தின் அனேக இடங்களிலும், வடதமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்யும். 16-ம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் மழை பெய்யும். ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். கடந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் 30 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது'' என்றார் பாலச்சந்திரன்.



வலைத்தளம் : தி இந்து
வலைப்பக்கம் : http://tamil.thehindu.com

 
azhagiri
சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும்படி அழகிரி தனது ஆதரவாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக வந்த தகவலால் பரபரத்துக் கிடக்கிறது திமுக தலைமை.

திமுக - அழகிரி முட்டல் மோதல்கள் முடிவுக்கு வராத நிலையில் சட்டமன்றத் தேர்தல் அறிவித்ததும் அழகிரியை மீண்டும் கட்சிக்குள் கொண்டுவர அழகிரியின் துாதுவராக நின்று அவரது சகோதரி செல்வி முயன்றார்.

மீண்டும் அழகிரியை கட்சிக்குள் இணைக்கும் பேச்சுவார்த்தை நீண்டுகொண்டே வந்தது. அதற்கேற்றவாறு அழகிரியும் நெடுநாட்களுக்கு பிறகு கடந்த மாதத்தில் கருணாநிதியை சந்தித்துப் பேசினார்.

அந்த சந்திப்பு குறித்து' அப்பாவும் மகனும் சந்தித்து கொண்டார்கள். இதில் அரசியல் எதுவும் இல்லையென்று மீடியாக்களிடம் கருத்துச் சொன்னார் ஸ்டாலின்.

ஆனால் அந்த சந்திப்பின் போது தான் மீண்டும் இணைந்து செயல்பட பல நிபந்தனைகளை தந்தை கருணாநிதியிடம் அழகிரி முன்வைத்ததாக சொல்லப்படுகிறது.

அடுத்தடுத்து வந்த செய்திகளில் அழகிரி மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டு தென் மாவட்டங்களில் பிரச்சாரம் செய்வார் என்று செய்திகள் வலம் வந்தன.
இந்நிலையில் திமுக தனது சட்டமன்ற வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. அதில் ஸ்டாலின் ஆட்களே பெருமளவு இருந்தனர். அப்செட் ஆன அழகிரி மீண்டும் வனவாசம் சென்றவர் போல் ஒதுங்கிக்கொண்டார்.

கடந்த சில நாட்களுக்கு முன் 'மதுரையில் திமுக பத்து தொகுதியிலும் தோற்கும்' என்று கொதிப்பை வெளிப்படுத்தினார். தேர்தல் நேரத்தில் மீடியாக்களிடம் அழகிரி வாயை திறக்க வேண்டாம்.

அவர் வாய் திறந்தால் வில்லங்கம் வருமென்று கருணாநிதி தரப்பில் செல்வியிடம் முறையிட்டனர். ஆனால் அழகிரி தரப்பு அதை கேட்கவில்லை.
மதுரைக்கு பிரச்சாரத்திற்கு வரும் கருணாநிதி, அழகிரியை சந்திப்பார். சில முக்கிய முடிவுகளை வெளியிடுவார் என்று அழகிரியிடம் ஆறுதலாக சொல்லி அடக்கி வைத்தனர்.

ஆனால் மதுரைக்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த கருணாநிதி இரண்டு நாட்களாக மதுரையில் முகாமிட்டு பொதுக்கூட்டம், தேர்தல் பிரசாரமும் செய்தார்.

ஆனால் அழகிரி தரப்பினரை கருணாநிதி பார்க்காததால் அழகிரியின் ஒட்டு மொத்த குடும்பமும் உஷ்ணமாகிவிட்டனர்.

இதனால் 'கட்சியை தாண்டி பேரன் பேத்திகளை பார்க்கக் கூட மனமில்லையா' என அழகிரி தரப்பு எரிச்சலடைந்ததாக சொல்லப்பட்டது.

இந்த நிலையில் மதுரையில் இன்று காலை தனது ஆதரவாளர்களை சந்தித்த மு.க.அழகிரி,' நீங்கள் எல்லோரும் மறவாமல் இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்’ என்று கேட்டுக்கொண்டார்.

அப்போது ஒரு பெண்மணி, 'தி.மு.க.வுக்குத்தானே ஓட்டு போடச் சொல்லுவீங்க’ என்று கேட்க, 'நான் சொல்றத செய்யுங்கம்மா' என்று அழுத்தமாக கூறிவிட்டு வீட்டுக்குள் போய்விட்டார்.

அழகிரியின் ஆதரவாளர்கள் கலைந்து போகாமல் அப்படியே நின்றிருந்தனர். திரைப்படத்தில் வரும் உணர்ச்சிகரமான காட்சியைப்போல அமைதியாக இருந்தது அழகிரியின் வீடு.

வீட்டிற்குள் போன அழகிரி மறுபடியும் வெளியே வந்தவர் " வரும் 19 ம் தேதிக்குப் பிறகு இந்தக்கூட்டம் கூட இங்கு வரமாட்டீங்க" என்று கலங்கினார்.
அதைக் கேட்டு அழகிரியின் ஆதரவாளர்கள்," நாங்க எங்கேயும் போக மாட்டோம். எப்பொழுதும் உங்களுடன்தான் இருப்போம் "என்றார்கள்.

அதற்கு “பார்க்கலாம்...பார்க்கலாம்... அனைவரும் அதிமுகவிற்கு ஓட்டுப் போடுங்கள்” என்று சொல்லிவிட்டு வீட்டிற்குள் சென்றுவிட்டார் அழகிரி.

அழகிரியின் நெருங்கிய வட்டத்தை சேர்ந்தவர்கள் அண்ணனின் பேச்சை கேட்போம் என முடிவெடுத்தாலும் அதற்கு அடுத்த வரிசை ஆதரவாளர்கள் மனநிலை வேறு மாதிரி உள்ளது.

“இவர்கள் அண்ணனை பயன்படுத்தி அதிகார பலன்களை அடைந்து விட்டார்கள். இனி அவர்களுக்கு கட்சி பின்னணி தேவையில்லை.
ஆனால் அண்ணன் சொல்கிறார் என்பதற்காக நாம் அதிமுகவிற்கு வாக்களித்தால் எதிர்காலத்தில் கட்சியின் கதவுகள் நிரந்தரமாக நமக்கு அடைக்கப்பட்டு விடும்.

நாம் பொறுத்திருந்துதான் முடிவெடுக்கவேண்டும் என்று தங்களுக்குள் விவாதம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.


kachchatheevu_anthony
கச்சத் தீவில் உள்ள பழமையான புனித அந்தோனியார் தேவாலயத்தை இடித்துவிட்டு, புதிதாக தேவாலயம் கட்டும்போது தமிழகத் தரப்பையும் இணைத்துக்கொள்ள வேண்டுமென தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், கச்சத் தீவில் இருக்கும் பழமையான புனித அந்தோனியார் தேவாலயத்தை இடித்துவிட்டு, புதிய தேவாலயத்தைக் கட்டுவதற்கு இலங்கை அரசு நடவடிக்கை எடுத்துவரும் நடவடிக்கைகள் தென் மாவட்டங்களில் உள்ள இந்திய மீனவர்களை கவலைக்குள்ளாக்கியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

புதிதாக தேவாலயம் கட்டுவது தொடர்பாக தாங்கள் கலந்தாலோசிக்கப்படவில்லை என்பது தொடர்பாக தாங்கள் கலந்தாலோசிக்கப்படவில்லை என்பதில் ரோமன் கத்தோலிக்கப் பிரிவைச் சேர்ந்த மீனவர்கள் கவலையடைந்திருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கச்சத் தீவில் புனித அந்தோனியார் திருவிழா நடந்தபோது, புதிய தேவாலயம் கட்டும் யோசனையை உள்ளூர்
பாதிரியார்கள் முன்வைத்தபோது, தாங்கள் அதில் இணைந்துகொள்ள
விரும்புவதாக தமிழக மீனவர்கள் தெரிவித்ததாக ஜெயலலிதா கூறியிருக்கிறார்.

ஆனால், தமிழக மீனவர்களைக் கலந்தாலோசிக்காமல் இப்போது உள்ள தேவாலயத்தை இடித்துவிட்டு புதிய தேவாலயத்தைக் கட்ட இலங்கை அரசு முடிவுசெய்திருப்பது திட்டமிட்ட ஆத்திரமூட்டும் நடவடிக்கை என முதலமைச்சர் ஜெயலலிதா குறிப்பிட்டிருக்கிறார்.

புதிய தேவாலயத்தை இலங்கை தரப்பே கட்டிமுடித்தால் எதிர்காலத்தில் தாங்கள் அங்கு சென்று வழிபடும் உரிமை தடுக்கப்படும் என தமிழக மீனவர்கள் அச்சப்படுவதாகவும் ஜெயலலிதா சுட்டிக்காட்டியிருக்கிறார்.

தமிழக மீனவர்களயும் இணைத்துக்கொண்டு புதிய தேவாலயம் கட்டும் முயற்சியை மேற்கொள்ள வேண்டுமென இலங்கை அரசை மத்திய அரசு வலியுறுத்த வேண்டுமென ஜெயலலிதா தன் கடிதத்தில் கூறியிருக்கிறார்.



வலைத்தளம் : பிபிசி
வலைப்பக்கம் : http://www.bbc.com/tamil

 
BJP
மே 16 ஆம் தேதி தமிழக சட்டப் பேரவை பொதுத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அரசியல் கட்சிகளின் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் ஏப்ரல் 22 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை நடைபெற்றது. மே 2 ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

தேர்தல் திங்கள்கிழமை (மே 16) நடைபெறும் நிலையில் அரசியல் கட்சியினர் மேற்கொண்டிருந்த தீவிரப் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.

முதல்வர் ஜெயலலிதா வியாழக்கிழமை திருநெல்வேலியில் தனது பிரசாரத்தை நிறைவு செய்த நிலையில், திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை சேப்பாக்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தனது பிரசாரத்தை நிறைவு செய்தார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த், தான் போட்டியிடும் உளுந்தூர்பேட்டையில் பிரசாரத்தை நிறைவு செய்தார். இதுபோல திமுக பொருளாளர் ஸ்டாலின் தான் போட்டியிடும் கொளத்தூர் தொகுதயிலும், பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி பென்னாகரத்திலும் பிரசாரத்தை நிறைவு செய்தனர்.

1
 
indo-china
தன்னுடைய அணு ஆயுதத் திறன்களை மேம்படுத்தியுள்ள சீனா, இந்திய எல்லையருகே தன் படைகளைக் குவித்து வருவதாக அமெரிக்க ராணுவத் தலைமைச் செயலகமான பென்டகன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் உலகின் பல பகுதிகளிலும் சீனா தன் ராணுவ பலத்தை காட்டி வருகிறது. குறிப்பாக பாகிஸ்தானுக்கு சீனா பெரும்பாலும் ராணுவ உதவிகளை வழங்கி வருகிறது என்று கூறியுள்ளது அந்த அறிக்கை.

இது குறித்து கிழக்கு ஆசியாவுக்கான பாதுகாப்பு துணை உதவிச் செயலர் ஆபிரகாம் எம்.டென்மார்க் செய்தியாளர்களிடம் கூறும்போது, “இந்திய எல்லைப் பகுதிகளில் சீனாவின் ஆயுதப்படை திறன்களும், படைகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதை நாங்கள் கவனித்து வருகிறோம்.

சீனாவின் இந்த நடவடிக்கைகள் எந்த அளவுக்கு தங்களது உள்ளார்ந்த நிலைத்தன்மையை பராமரிக்கச் செய்யப்படுகிறது அல்லது எந்த அளவுக்கு அண்டை நாட்டிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்த செய்யப்படுகிறது என்பதை சரியாகக் கணிக்க முடியவில்லை.

இந்தியாவுடனான அமெரிக்காவின் இருதரப்பு உறவுகள் தொடர்ந்து மேம்படுத்தப்படும். சீனாவுக்காக அல்ல, இந்தியா தன்னிலே இந்த விவகாரங்களில் ஒரு முக்கிய நாடாக திகழ்கிறது. எனவே இந்தியாவுடன் அதன் மதிப்புக்காக நாங்கள் கூடுதலாக உறவுகளை வலுப்படுத்தவிருக்கிறோம்” என்றார்.

சீனா-இந்தியா எல்லை விவகாரம் பற்றி பெண்டகன் அறிக்கையில் கூறும்போது, “இந்திய-சீன எல்லைப்பகுதியில் குறிப்பாக பிரச்சினைகள் உள்ள எல்லை பகுதியில் இருதரப்பினரும் ஆயுதப்படையுடன் வலம் வருகின்றனர். செப்டம்பர் 2015-ல் 5 நாள் இருதரப்பினரும் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்ட பிறகு தற்போது நிலவரம் இவ்வாறு உள்ளது.

இருநாடுகளுக்கு இடையேயும் வர்த்தக ஒப்பந்தங்கள் இருந்து வரும் நிலையிலும் கூட அருணாச்சலப்பிரதேச விவகாரத்தில் இருதரப்பினரிடையேயும் பதற்றம் நிலவுகிறது.

சீன பொருளாதாரம் விரிவாக்கம் அடைந்து வருவதால் அதன் நலன்கள் உலகளாவிய பரிமாணத்தை எட்டியுள்ளன. ஆகவே புதிய பகுதிகளிலும் தங்கள் ஆதிக்கத்தை சீனா நிலைநாட்டுவதில் வியப்பேதும் இல்லை. ஆனால் இந்த நடவடிக்கைகளுக்குப் பின்னால் அதன் நோக்கங்கள் பற்றி எந்த ஒரு மதிப்பு சார்ந்த கூற்றும் உள்ளடங்கியிருப்பதாக தெரியவில்லை.

சீனாவின் ஆயுதங்களை பெரும்பாலும் வாங்குவது பாகிஸ்தானே. ஆயுத விற்பனையோடு மட்டுமல்லாமல், பாதுகாப்பு கூட்டு நடவடிக்கைகளிலும் இருநாடுகளும் ஈடுபட்டுள்ளன.

1998-ம் ஆண்டு முதல் தனது 6 அண்டை நாடுகளுடன் 11 எல்லைப்பிரச்சினைகளை சீனா தீர்த்து வைத்துள்ளது. ஆனால் சமீபகாலமாக கடல்சார் கச்சா எண்ணெய் எரிவாயு நிரம்பிய பொருளாதார பகுதிகளில் சீனாவின் அணுகுமுறை ஆதிக்கம் செலுத்துவதாக உள்ளது” என்று பென்டகன் அறிக்கை தெரிவித்துள்ளது.


வலைத்தளம் : தி இந்து
வலைப்பக்கம் : http://tamil.thehindu.com


China
சீனாவின் முப்படைகளை, வரும் 2020-ஆம் ஆண்டுக்குள் உலகின் மிக நவீன ராணுவமாக்க அந்த நாடு திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து சீனா வெளியிட்டுள்ள 13-ஆவது ராணுவ மேம்பாட்டு ஐந்தாண்டுத் திட்ட (2016-2020) அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

அடுத்த ஐந்து ஆண்டுகளில், சீன ராணுவத்தின் போர்த் திறனில் வியத்தகு வளர்ச்சி ஏற்படுத்தப்படும்.

2020-ஆம் ஆண்டுக்குள், சீன முப்படைகளின் அனைத்துப் பிரிவுகளும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணினித் தொழில்நுட்பங்களின் உதவியுடன் முழுவதும் இயந்திரமயமாக்கப்படும்.

சீன ராணுவத்தை உலகின் தலைசிறந்த படையாக உயர்த்துவதற்கு, அடுத்த ஐந்தாண்டுகளில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் அடித்தளமாக அமையும்.

இதற்காக, கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அந்த ஐந்தாண்டுத் திட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நவீனமயமாக்கலின் ஒரு பகுதியாக, வீரர்களின் எண்ணிக்கையை 23 லட்சத்திலிருந்து 20 லட்சமாகக் குறைக்கும் நடவடிக்கைகளை சீன ராணுவம் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.



வலைத்தளம் : தினமணி
வலைப்பக்கம் : http://www.dinamani.com

MARI themes

Powered by Blogger.