A+ A-

டிவில்லியர்ஸ் 43 பந்துகளில் சதம் அடித்து, ஐ.பி.எல். போட்டியில் 5வது அதிவேக சதத்தை பதிவு செய்தார்.

 
AB de Villiers
ஐ.பி.எல். போட்டியில் குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூர் 144 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் டிவில்லியர்ஸ்- விராட் கோலியின் ஆட்டம் அதிரடியாக இருந்தது. இதனால் பெங்களூர் அணி 20 ஒவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 248 ரன் குவித்தது. டிவில்லியர்ஸ் 52 பந்தில் 129 ரன்னும் (10 பவுண்டரி, 1 2 சிக்சர்) விராட்கோலி 55 பந்தில் 109 ரன்னும் (5 பவுண்டரி, 8 சிக்சர்) எடுத்தனர்.

இருவரும் இணைந்து 98 பந்தில் 229 ரன் குவித்து 20 ஓவர் வரலாற்றில் புதிய சாதனை படைத்தனர்.

பின்னர் ஆடிய குஜராத் லயன்ஸ் 18.4 ஓவர்களில் 104 ரன்னில் சுருண்டது. இதனால் பெங்களூர் அணி 144 ரன்னில் வென்று ஐ.பி.எல்.லில் புதிய சாதனை படைத்தது.

இந்த ஆட்டத்தில் டிவில்லியர்ஸ் 43 பந்தில் சதம் அடித்தார். இதில் 9 பவுண்டரியும், 8 சிக்சரும் அடங்கும். இதன்மூலம் ஐ.பி.எல். போட்டியில் அதிவேகத்தில் சதம் அடித்த 5-வது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

கிறிஸ்கெய்ல் 30 பந்தில் சதம் அடித்தே ஐ.பி.எல். போட்டியில் சாதனையாக இருக்கிறது.



வலைத்தளம் : மாலை மலர்
வலைப்பக்கம் : http://www.maalaimalar.com

ஐ.பி.எல். போட்டியில் குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூர் 144 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.