ஒருவரது ஜாதகப்படி அவரது சகல சுக போகங்களுக்கும் சுக்ரனே காரணகர்த்தா ஆவார். ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், அவரது ஜாதகத்தில் சுக்ரன் பலம் பெற்றிருந்தால், அந்த நபர், அழகு, நல்ல தோற்றம், முக வசீகரம் பெற்றிருக்க இடமுண்டு. குரு பகவானுக்கு அடுத்தபடியாக சுபத் தன்மை பெற்றவர் இவர். சுக்ரன், மகாலட்சுமியின் உறைவிடம். சுக்ரனின் அதிதேவதை துர்க்கை. இன்பமாக இருந்தாலும், துன்பமாக இருந்தாலும், அதை அதிகமாகவும், வேகமாகவும் கொடுக்கக் கூடியவர் சுக்ரன். இவரது பலனைப் பெற வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை வழிபட்டு வரலாம். ஸ்ரீரங்கம், திருநாவலூர், பட்டீஸ்வரம் போன்ற புண்ணிய தலங்களுக்கு சென்று சுக்ரனை தரிசித்தும் வரலாம். சுக்ர தசை காலம் 20 ஆண்டுகள். ஒருவரது ஜாதகத்தில் சுக்ரன், வர்க்கோத்தம நிலையில் அமைந்திருந்தால், அந்த நபரின் அனைத்து ஆசைகளும் நிறைவேறுவது உறுதி.
இனி கைரேகை நிலவரப்படி சுக்ரனின் பலனைப் பற்றிப் பார்ப்போம். கட்டை விரலின் கீழ் பகுதியில் அமைந்துள்ளது சுக்ர மேடு. மற்ற கிரக மேடுகளை விட, இது கையில் அதிக பாகத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. சுக்ர மேட்டில் அமைந்துள்ள நட்சத்திர குறிகள் பல உண்மைகளை வெளிப்படுத்தும்.
உதாரணமாக சுக்ர மேட்டின் அடிப்பாகத்தில் நட்சத்திரக் குறி தென்பட்டால், ஒரு பெண்ணால் தனக்கு ஏற்பட்ட துரதிர்ஷ்டத்தை தெரிவிக்கும். சுக்ர மேடு பின்னலின்றி அழகாக அமைந்திருந்தால், நல்ல திருமண வாழ்வு அமையும். செங்குத்து ரேகை சுக்ர மேட்டில் தென்பட்டால் செய்யும் தொழிலில் லாபம் கிடைக்கும். இந்த மேட்டில் வட்டக்குறி தென்பட்டால், நோய்கள் உண்டாக வாய்ப்புண்டு. சுக்ர மேடு பள்ளமாக அமைந்திருந்தால், அந்த நபரின் திருமண வாழ்வு அவ்வளவு சிறப்பாக இருக்காது.
இனி கைரேகை நிலவரப்படி சுக்ரனின் பலனைப் பற்றிப் பார்ப்போம். கட்டை விரலின் கீழ் பகுதியில் அமைந்துள்ளது சுக்ர மேடு. மற்ற கிரக மேடுகளை விட, இது கையில் அதிக பாகத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. சுக்ர மேட்டில் அமைந்துள்ள நட்சத்திர குறிகள் பல உண்மைகளை வெளிப்படுத்தும்.
உதாரணமாக சுக்ர மேட்டின் அடிப்பாகத்தில் நட்சத்திரக் குறி தென்பட்டால், ஒரு பெண்ணால் தனக்கு ஏற்பட்ட துரதிர்ஷ்டத்தை தெரிவிக்கும். சுக்ர மேடு பின்னலின்றி அழகாக அமைந்திருந்தால், நல்ல திருமண வாழ்வு அமையும். செங்குத்து ரேகை சுக்ர மேட்டில் தென்பட்டால் செய்யும் தொழிலில் லாபம் கிடைக்கும். இந்த மேட்டில் வட்டக்குறி தென்பட்டால், நோய்கள் உண்டாக வாய்ப்புண்டு. சுக்ர மேடு பள்ளமாக அமைந்திருந்தால், அந்த நபரின் திருமண வாழ்வு அவ்வளவு சிறப்பாக இருக்காது.
Post a Comment