பாகிஸ்தானில் மிகப் பெரும் பணக்கார அரசியல்வாதியாக, பிரதமர் நவாஸ் ஷெரீப் உருவெடுத்துள்ளார்.பாகிஸ்தானில், எம்.பி.,க் கள், தங்கள் சொத்து விவரங்களை, தேர்தல் கமிஷனிடம் தெரிவிக்க வேண்டும். அதன்படி, 2015ம் ஆண்டுக்கான சொத்து விவரங்களை, எம்.பி.,க்கள் தாக்கல் செய்துள்ளனர்.
இதன் அடிப்படையில், பாகிஸ்தானில், மாபெரும் கோடீஸ்வர அரசியல்வாதி, பிரதமர் நவாஸ் ஷெரீப்தான் எனத் தெரிய வந்துள்ளது.நவாஸுக்கும், அவரது மனைவிக்கும் மொத்தம் ரூ.200 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து இருப்பதும், கடந்த நான்கு ஆண்டுகளில், இவர்களின் சொத்து மதிப்பு, இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதும் தெரிய வந்துள்ளது. வெளிநாட்டில் இருக்கும் தன் மகன் ஹுசைன் நவாஸ் மூலம் பல லட்ச ரூபாய் வந்ததே இதற்கு காரணம், என நவாஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த 2015ல் மட்டும், தன் மகனிடம் இருந்து, 21.5 கோடி ரூபாய் வந்ததாக, நவாஸ் தெரிவித்துள்ளார். 2014ல், 23.9 கோடி ரூபாயும், 2013ல், 19.75 கோடி ரூபாயும், வந்ததாகவும் நவாஸ் தெரிவித்துள்ளார்.
Post a Comment