கேதார கெளரி விரதம் முழுக்க முழுக்க மாங்கல்ய பலத்தை அளிக்கக் கூடியது. ஐப்பசி அமாவாசையன்று வரக்கூடிய கேதார கெளரி விரதம் மிக முக்கியமானது. சிவனை நினைத்து வழிபட்டு எல்லா பலத்தையும் பெறுவது. சக்தி வெற்றி பெற்ற நாள் அது.
இதனை சுமங்கலிகள் கடைபிடிக்கும்போது அவர்களுடைய மாங்கல்ய பாக்கியம் தீர்க்க சுமங்கலியாகும். கன்னிப் பெண்கள் கடைபிடிக்கும்போது அவர்களுக்கு நல்ல வரன்கள் அமையும். எனவே கேதார கெளரி விரதம் என்பது விரதங்கள் அனைத்திலும் மிக விசேடமானது.
கெளரி என்றால் அம்பாள். சிவனை நினைத்து விரதம் இருந்து, தியானித்து எல்லா பலத்தையும் பெற்ற நாள். தான் பெற்றதைப் போல் பெண்கள் அனைவரும் பெற வேண்டும் என்று அம்பாள் அருளும் நாள் அது.
சிவனை நோக்கி வணங்குவோர் அனைவருக்கும் தனக்கு வழங்கியதுபோல் பலத்தையும், பாக்கியத்தையும் வழங்க வேண்டும் என்று அம்பாள் அருளும் நாள். எனவே பெண்களைப் பொருத்தவரை இது மிகவும் விசேடமான நாள் ஆகும்.
Post a Comment