A+ A-

எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை : சூர்யாவின் அகரம் ஃபவுண்டேஷன் அறிவிப்பு

 
Surya
ஏழை குழந்தைகளுக்கான படிப்புக்காக நடிகர் சூர்யாவில் ஆரம்பிக்கப்பட்ட அகரம் ஃபவுண்டேஷன், தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளுக்கு உதவி செய்வதுடன், ஏழை எளிய குழந்தைகளுக்கான கல்வி உதவியையும் செய்து வருகிறது.

இந்த நிலையில், சூர்யாவின் அகரம் அறக்கட்டளை இந்தமுறை மக்கள் நலக்கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்திருப்பதாக இணையத்தில் பரவிய செய்திகள் ஆச்சரியத்துடன் பகிரப்பட்டன.

சூர்யாவின் அகரம் அறக்கட்டளையின் நிலைப்பாடு என்பது சூர்யாவின் நிலைப்பாடு என்பதால் அவரது இந்த வெளிப்படையான ஆதரவு குறித்து கருத்துகள் பரிமாறப்பட்டன. இந்நிலையில், அகரம் அறக்கட்டளை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

"சமூக வலைத்தளத்தில் 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் அகரம் அறக்கட்டளை தனிப்பட்ட ஒரு கட்சிக்கு ஆதரவு அளிக்க சொல்லியிருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன.

நாங்கள் எந்த கட்சியையும் சாராதவர்கள் என்பதையும், தேர்தல் நேரத்தில் எந்த ஒரு கட்சிக்கும் ஆதரவு கொடுக்கவில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம்" என்று அகரம் அறக்கட்டளையின் ட்விட்டர் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.

சூர்யாவின் அகரம் அறக்கட்டளை இந்தமுறை மக்கள் நலக்கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்திருப்பதாக இணையத்தில் பரவிய செய்திகள் ஆச்சரியத்துடன் பகிரப்பட்டன.