A+ A-

கச்சத் தீவில் புதிய தேவாலயம்: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்


kachchatheevu_anthony
கச்சத் தீவில் உள்ள பழமையான புனித அந்தோனியார் தேவாலயத்தை இடித்துவிட்டு, புதிதாக தேவாலயம் கட்டும்போது தமிழகத் தரப்பையும் இணைத்துக்கொள்ள வேண்டுமென தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், கச்சத் தீவில் இருக்கும் பழமையான புனித அந்தோனியார் தேவாலயத்தை இடித்துவிட்டு, புதிய தேவாலயத்தைக் கட்டுவதற்கு இலங்கை அரசு நடவடிக்கை எடுத்துவரும் நடவடிக்கைகள் தென் மாவட்டங்களில் உள்ள இந்திய மீனவர்களை கவலைக்குள்ளாக்கியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

புதிதாக தேவாலயம் கட்டுவது தொடர்பாக தாங்கள் கலந்தாலோசிக்கப்படவில்லை என்பது தொடர்பாக தாங்கள் கலந்தாலோசிக்கப்படவில்லை என்பதில் ரோமன் கத்தோலிக்கப் பிரிவைச் சேர்ந்த மீனவர்கள் கவலையடைந்திருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கச்சத் தீவில் புனித அந்தோனியார் திருவிழா நடந்தபோது, புதிய தேவாலயம் கட்டும் யோசனையை உள்ளூர்
பாதிரியார்கள் முன்வைத்தபோது, தாங்கள் அதில் இணைந்துகொள்ள
விரும்புவதாக தமிழக மீனவர்கள் தெரிவித்ததாக ஜெயலலிதா கூறியிருக்கிறார்.

ஆனால், தமிழக மீனவர்களைக் கலந்தாலோசிக்காமல் இப்போது உள்ள தேவாலயத்தை இடித்துவிட்டு புதிய தேவாலயத்தைக் கட்ட இலங்கை அரசு முடிவுசெய்திருப்பது திட்டமிட்ட ஆத்திரமூட்டும் நடவடிக்கை என முதலமைச்சர் ஜெயலலிதா குறிப்பிட்டிருக்கிறார்.

புதிய தேவாலயத்தை இலங்கை தரப்பே கட்டிமுடித்தால் எதிர்காலத்தில் தாங்கள் அங்கு சென்று வழிபடும் உரிமை தடுக்கப்படும் என தமிழக மீனவர்கள் அச்சப்படுவதாகவும் ஜெயலலிதா சுட்டிக்காட்டியிருக்கிறார்.

தமிழக மீனவர்களயும் இணைத்துக்கொண்டு புதிய தேவாலயம் கட்டும் முயற்சியை மேற்கொள்ள வேண்டுமென இலங்கை அரசை மத்திய அரசு வலியுறுத்த வேண்டுமென ஜெயலலிதா தன் கடிதத்தில் கூறியிருக்கிறார்.



வலைத்தளம் : பிபிசி
வலைப்பக்கம் : http://www.bbc.com/tamil

கச்சத் தீவில் உள்ள பழமையான புனித அந்தோனியார் தேவாலயத்தை இடித்துவிட்டு, புதிதாக தேவாலயம் கட்டும்போது தமிழகத் தரப்பையும் இணைத்துக்கொள்ள வேண்டுமென தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியிருக்கிறார்.