A+ A-

தமிழக சட்டப் பேரவைத் தேர்தல்: பிரசாரம் ஓய்ந்தது

 
BJP
மே 16 ஆம் தேதி தமிழக சட்டப் பேரவை பொதுத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அரசியல் கட்சிகளின் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் ஏப்ரல் 22 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை நடைபெற்றது. மே 2 ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

தேர்தல் திங்கள்கிழமை (மே 16) நடைபெறும் நிலையில் அரசியல் கட்சியினர் மேற்கொண்டிருந்த தீவிரப் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.

முதல்வர் ஜெயலலிதா வியாழக்கிழமை திருநெல்வேலியில் தனது பிரசாரத்தை நிறைவு செய்த நிலையில், திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை சேப்பாக்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தனது பிரசாரத்தை நிறைவு செய்தார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த், தான் போட்டியிடும் உளுந்தூர்பேட்டையில் பிரசாரத்தை நிறைவு செய்தார். இதுபோல திமுக பொருளாளர் ஸ்டாலின் தான் போட்டியிடும் கொளத்தூர் தொகுதயிலும், பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி பென்னாகரத்திலும் பிரசாரத்தை நிறைவு செய்தனர்.

மே 16 ஆம் தேதி தமிழக சட்டப் பேரவை பொதுத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அரசியல் கட்சிகளின் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.