A+ A-

முகப்பருக்களால் வறும் தழும்புகளை மறைய வைக்க வெந்தயம் பயன்படுத்தலாம்

இன்றைய கால இளையவர்களில் முகப்பரு வராதவர்களே இல்லையென்று சொல்லலாம், முகப்பரு வந்து அது மறைந்தாலும் அதன் தழும்புகளும் தடயங்களும் ஒரு சிலருக்கு மாறாமல் அப்படியே இருக்கும்.

முகப்பருவின் தழும்புகள் நம் அழகை அபடியே மறைத்து அசிங்கமான தோற்றத்தை நமக்கு ஏற்படுத்திவிடும். வெந்தயமானது முகப்பரு தழும்பை நீக்குவதில் மிகச்சிறந்த மருந்தாகும். முகப்பருவின் தழும்புகளை நீக்க இந்த வெந்தயத்தை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதைப் பற்றி பார்ப்போம்

வெந்தயத்தை பேஸ்ட்டை போல அரைத்து முகத்தில் தடவி மாஸ்கு போல் பயன்படுத்தலாம், தழும்புகள் மீது தடவினால் நல்ல பலன் கிடைக்கும்.

வெந்தயத்தை வெந்நீரில் நன்றாக கொதிக்க வைத்து பின்னர் அதை அரைத்து குளிர்ச்சியான இடத்தில் வைக்கவும். இதை தழும்புகள் மீது தடவி பின்பு கால் மணி நேரம் கழித்து குளிர்ந்த தண்ணீரில் முகம் கழுவவும்.

பன்னீருடன் சந்தனத்தை கலந்து பேஸ்ட்டாக உருவாக்கி அதனை முகத்தில் மாஸ்க்காக தடவிக்கொள்ளவும். சுமார் ஒரு மணிநேரம் கழித்து முகத்தை நன்றாக கழுவி கொள்ளவும்.

ஆலிவ் எண்ணெயை தொடர்ந்து முகத்தில் தடவி வந்தால் பருத் தழும்புகள் மறையும் மேலும் பருக்கள் உருவாவதையும் தடுக்கும்.

எலுமிச்சை சாற்றை முகப்பருக்கள் மீது தடவவும். எலுமிச்சையும் கரும்புள்ளிகளை போக்கும் சிறந்த மருந்தாகும்.

இன்றைய கால இளையவர்களில் முகப்பரு வராதவர்களே இல்லையென்று சொல்லலாம், முகப்பரு வந்து அது மறைந்தாலும் அதன் தழும்புகளும் தடயங்களும் ஒரு சிலருக்கு மாறாமல் அப்படியே இருக்கும்.