A+ A-

கேரள சட்டப்பேரவையில் உள்ள 140 தொகுதிகளுக்கு திங்கள்கிழமை (மே 16) ஒரே கட்டமாக தேர்தல்

 
poll
கேரள சட்டப்பேரவையில் உள்ள 140 தொகுதிகளுக்கு திங்கள்கிழமை (மே 16) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கேரள சட்டப்பேரவையில் மொத்தம் 141 இடங்கள் உள்ளன. இதில் ஒரு உறுப்பினர், நியமனம் செய்யப்படுவார். எஞ்சிய 140 இடங்களுக்கும் திங்கள்கிழமை (மே 16) தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில், 2.61 கோடி பேர் வாக்களிக்கும் தகுதியைப் பெற்றுள்ளனர். 140 தொகுதிகளிலும், அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சைகள் என மொத்தம் 1,203 பேர் களத்தில் உள்ளனர். அவர்களில் 109 பேர் பெண்கள்.

தேர்தல் தொடர்பாக எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில் இடதுசாரி ஜனநாயக முன்னணி வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் எனத் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் கட்சியும் தேர்தலில் வெற்றி பெற்று புதிய சரித்திரத்தை படைப்போம் என்ற நம்பிக்கையுடன் உள்ளது. கேரள சட்டப்பேரவைக்கு இம்முறை முதல்முறையாக தனது உறுப்பினரை அனுப்பிவிட வேண்டும் என்ற தீவிரத்துடன் பாஜகவும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது.

முதல்வர் உம்மன் சாண்டி, உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா (இருவரும் காங்கிரஸ்), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்கள் வி.எஸ். அச்சுதானந்தன், பினராயி விஜயன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவரும், வர்த்தகத் துறை அமைச்சருமான குஞ்ஞாலிக்குட்டி, முன்னாள் நிதியமைச்சர் கே.எம். மாணி (கேரள காங்கிரஸ்-எம்), பாஜக மாநிலத் தலைவர் கும்மணம் ராஜசேகரன், மத்திய முன்னாள் அமைச்சர் ஓ. ராஜகோபால், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் ஆகியோர் தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் ஆவர்.

கேரள சட்டப்பேரவையில் உள்ள 140 தொகுதிகளுக்கு திங்கள்கிழமை (மே 16) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.